அரசு ஊழியர்களுக்கு 25% வரை அகவிலைப்படி (DA) உயர்வு – வெளியான தகவல்!
சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் தனது அரசுத் துறை ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 25% வரை அகவிலைப்படி (DA) உயர்வை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த உதவித்தொகை அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) தொகையை மீட்டெடுப்பதாக மத்திய அமைச்சகம் அறிவித்தபிறகு பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான DA தொகையை உயர்த்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகமும், தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐந்தாவது பஞ்சாப் ஊதியக் குழுவின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் DA தொகை அடிப்படை ஊதியத்தின் தற்போதைய 164 சதவீதத்திலிருந்து 189 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக DA உயர்வுத்தொகை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 25 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் ஆறாவது பஞ்சாப் ஊதியக் குழுவின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான DAவை 17 % லிருந்து 28% ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதிய அளவுகள் மத்திய அரசின் ஊதிய அளவின் அடிப்படையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகரிக்கப்பட்ட DA திருத்தங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் பஞ்சாபிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.