ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – மாஜி ராணுவத்தினருக்கு வாய்ப்பு!
இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ரயில்வே துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு சார்ந்த பணியிடங்களுக்கு நியமிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ரயில்வே துறை:
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து துறைகளும் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதிலும் ரயில்வே துறை அரசின் கட்டுப்பாடுகளால் தொடர் சரிவை சந்தித்தது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில்கள் இயங்காததாலும், பணிகள் வருகை குறைவினாலும் ரயில்வே துறை வருவாய் இழந்தது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.
CBSE 10, 12ம் வகுப்புகளுக்கான பருவத்தேர்வு 2021 – கால அட்டவணை வெளியீடு!
அதனால் அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் வேலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி ரயில்வே துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு சார்ந்த பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நியமிக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
முதல் கட்டமாக ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில், கேட் கீப்பர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதனால் கோட்டம் வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு சார்ந்த பணியிடம், காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
How to apply this job???