CBSE 10, 12ம் வகுப்புகளுக்கான பருவத்தேர்வு 2021 – கால அட்டவணை வெளியீடு!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பருவத்தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பருவத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்பின் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பினை வெளியிட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு பருவத்தேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஜெக்டிவ் முறையில் தேர்வு 90 நிமிடம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
தற்போது குளிர்காலம் நிலவி வருவதால் தேர்வு காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்றும் தேர்வுக்குப் பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது பருவத்தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு அட்டவணையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்கும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.