தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் – சட்டப் போராட்டக் குழு அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் தங்களது பல கோரிக்கையையும் அரசுக்கு வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
கோரிக்கைகள்:
தமிழக அரசின் பணியாளர்களுக்கு தமிழக அரசு பல சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களையும் வழங்கி வருகிறது. இருப்பினும், தங்களது பணிக்கான சில கோரிக்கைகளையும் அரசிடம் வேண்டி வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் பல கோரிக்கைகளையும் வலியுறுத்தி அரசின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த பணியாளர்கள் பல போராட்டங்களை நடத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி தொடங்கி 5 மாதங்கள் கடந்து உள்ள நிலையில், முதல் முறையாக தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர். அதில், அரசு மருத்துவர்களுக்காக கடந்த 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கும் அரசாணையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் பல முறை போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப்பணியாளர்களாக போராடி உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. மேலும், அரசு மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க, அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும் கார்ப்பஸ் பண்ட் நிதி கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து முறையாக வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 20 ம் தேதி மதுரையில் மற்றும் நவம்பர் 10ம் தேதி சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என்று மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.