நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக, 78.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!
மொத்தம் 74 வாக்கு எண்ணும் மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதியான நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் வார்டு வாரியாக, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்படும். வாக்கு சீட்டுகள் மூலம் தேர்தல் நடைபெற்றதால் முன்னணி நிலவரம் நாளை பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை, மின்தடை? – அமைச்சர் விளக்கம்!
வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி குறித்த விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேறு யாருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதி கிடையாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மாலைக்குள் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.