சென்னை: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்து 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியிருந்தது. அதனை தொடர்ந்து அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு திமுக தங்களது அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அதனால் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுவதால், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் 1 லிட்டர் 101.53 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 97.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அக்.11 நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 101.79 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.15க்குள் ‘இது’ கட்டாயம்!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரிக்கிறது. அதனால் இன்னும் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.