அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.15க்குள் ‘இது’ கட்டாயம்!
டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர் விஜய் தேவ் மாநிலத்தின் அனைத்து அரசு துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த ஏழு மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் குறைந்து வருகிறது. கடந்த 206 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் தற்போது 2,36,643 பேர் தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இன்றைய ப்ரோமோ – போட்டியாளர்களை கலாய்த்து தள்ளிய ராஜு!
அதன்படி, அனைத்து டெல்லி அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் அக்டோபர் 16 முதல் தங்கள் அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு வர அனுமதிக்கப்படாது என்று அறிவித்தது. மேலும், தடுப்பூசி போடப்படாத டெல்லி அரசு ஊழியர்கள், விடுப்பில் உள்ளதாக கருதப்படுவார்கள். ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று அதற்குரிய சான்றுகள் அல்லது ஆரோக்ய சேது செயலி மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று உறுதியாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர் விஜய் தேவ் அவர்கள், அரசின் அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று ஆரோக்ய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்த வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதன் மூலம் தொற்று பாதிப்பை மேலும் குறைக்கலாம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.