தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
தமிழக பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மதிப்பீட்டுத் தேர்வினை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டுத் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த செப்.1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாரத்திற்கு 6 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை புரிகின்றனர். சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
சென்னை: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கட்டகத்தில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், உயிரிவிலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினிபயன்பாடுகள் ஆகிய பாடங்களில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
அக்.14ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் வருகிற அக்.12ம் தேதி முதல் தினசரி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் ஒருமணிநேரம் கால அவகாசம் அளித்து தேர்வு நடத்த வேண்டும். இதற்கான முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.