திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்!
திருப்பதியில் 2021 ம் ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை (07.10.2021) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருப்பதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
பிரம்மோற்சவ விழா :
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது திருப்பதியில் நாளை முதல் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை ரத்து செய்ய கோரிக்கை!
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வருவர். இது இத்திருநாளின் சிறப்பாகும். இதனை காண பக்தர்கள் மணிக்கணக்காக காத்து கிடந்து சுவாமி தரிசனம் செய்வர்.
ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!
அதன்படி நடப்பாண்டு பிரம்மோற்சவ விழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. விழாவின் முன்னேற்பாடாக பிரமோற்சவ விழாவையொட்டி கோவில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் நடந்து வர ஏதுவாக அலிபிரி நடைபாதை திறக்கப்படுகிறது.