TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை ரத்து செய்ய கோரிக்கை!
தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேரக்கூடாது என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் வயது வரம்பு:
தமிழகத்தில் ஆசிரியர்கள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!
தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்தது. அப்போது 40 வயதை கடந்தவர்கள் இத்தேர்வில் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.10 ஆக குறைப்பு? தெற்கு ரயில்வே விளக்கம்!
தமிழகத்தின் அனைத்து அரசு பணிகளுக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் அரசு உயர்த்தியது. எனினும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. பள்ளி அளவில் சரியான விகிதாச்சாரத்தில் ஆசிரியர்களை நியமிக்கவில்லை ஆண்டுதோறும் ஆசிரியர் நியமனம் செய்யாத அரசுக்கு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்க உரிமை இல்லை என்று பாமக நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். எனவே 40 வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேரக்கூடாது என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.