அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பங்கள் வரவேற்பு – ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக ஆன்லைன் முறையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா், மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆதார் கார்டில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் கீழே!
அதில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது என்றும் 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்கும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? RR vs MI இன்று மோதல்!!
எழுத படிக்க தெரிந்தவர்கள் தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகள் நடைபெறும் இந்த படிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆர்வம் உள்ள மாணவா், மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் விவரங்களை அறிய தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி. சவேரியார்புரம், சிலுவைப்பட்டி (அஞ்சல்) தூத்துக்குடி-2 என்ற முகவரியில் நேரில் செல்லலாம் என்றும் அல்லது 9487739296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.