ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு – அக்.20 நேர்காணல்!
திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியுடையவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாக தொழில்கள் அனைத்தும் முடங்கியது. இதனால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து மாத வருமானம் இன்றி சிரமப்பட்டனர். தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வந்ததையடுத்து மக்கள் மீண்டும் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் வேலைக்கு தற்காலிக பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது.
அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பங்கள் வரவேற்பு – ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி தற்போது திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கு திருச்சி ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் அக்டோபர் 20 ம் தேதி காலை 10 மணிக்கு காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரங்களை மருத்துவ கல்லூரியின் இணையதளம் மற்றும் தகவல் பலகையில் காணலாம்.
பணியிடங்கள் மற்றும் தொகுப்பூதியம்:
- டிராமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டென்ட் (1) – ரூ.10,000
- அறுவை சிகிச்சை பிரிவு செயலாளர் (1) – ரூ.15,000
- அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்ப உதவியாளர் (2) – ரூ.15,000
- மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய உதவியாளர் (2) – ரூ.13,000
- மது மீட்பு சிகிச்சை மைய உதவியாளர் (2) – ரூ.18,000
- ஆய்வக ஆராய்ச்சி உதவியாளர் (2) – ரூ.40,000
- ஆய்வக உதவியாளர் (1) – ரூ.6,500
- காவலர் (2) – ரூ.6,300
- சமூக பணியாளர் (2) – ரூ.18,000
- மருத்துவ பணியாளர் (4) – ரூ.5000
- தூய்மை பணியாளர் (4) – ரூ.5000
Good for work confirm
Good for job