கட்டுக்குள் வந்த கொரோனா, ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – அரசு அறிவிப்பு!
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் இதையடுத்து அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
கட்டுப்பாடுகள் நீக்கம்:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்குகளை அறிவித்தன. மேலும் பல கட்டுப்பாடுகளையும் அறிவித்து மக்கள் நடமாட்டத்தை குறைத்து நோய் பரவலை தடுக்க முயற்சித்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், போன்ற நாடுகள் கொரோனாவால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. தினந்தோறும் அதிகரித்த தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் உலக நாடுகள் வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
BYJU’S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மற்ற நாடுகளை தொடர்ந்தும் ஜப்பானில் முழுவீச்சாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்டது. தற்போது தினசரி பாதிப்பு 1,500க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஜப்பானில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.