இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
இ-சேவை மையம் நடத்த அனுமதி பெற்றுள்ள சில தனியார் கணினி மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இ-சேவை மையம்:
அரசு ஆவணங்களை பதிவு செய்வதில் இ-சேவை மையங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. பல தனியார் கணினி மையங்களில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை மையங்களில் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள், 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் போன்றவற்றிற்காக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
BYJU’S நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அரசு பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.10-ம், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடா்டபான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம் சேவைக்கட்டணமாக தமிழக அரசினால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA அதிகரிப்பு – இரட்டை போனஸ்? சூப்பர் தகவல்!
ஆனால் சில தனியார் கணினி மையங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிறுவனங்கள் குறித்து தெரிய வந்தால் இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் அளிக்க விரும்பினால் 18004251333 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் கூறியுள்ளார்.