IPL 2021 – KKR vs PBKS: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
இன்று நடந்த ஐபிஎல் தொடரின் 45 வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் T-20:
ஐபிஎல் தொடரின் 45 வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கிறது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் 6 போட்டியிலும், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இறப்பு காட்சியில் நடித்த லட்சுமி அம்மாவிற்கு பரிகாரம்? – புதிய சர்ச்சை!
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் இருவரில் வெங்கடேஷ் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் நடித்திருந்தார். அவர் 49 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார். அடுத்து திரிபாதி 34 மற்றும் ராணா 31 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர். கார்த்திக் திவாரி 11 ரன்கள் எடுத்து அர்ஷிதீப் பந்தில் தனது ஆட்டத்தை இழந்தார். கொல்கத்தா அணியினர் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 165 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு எடுத்தனர்.
IPL 2021 – KKR vs PBKS: பஞ்சாப் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் கேஎல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். 6 வது ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் 67 ரன்கள் மற்றும் மாயன்க் 40 ரன்களையும் எடுத்தனர். இறுதியாக 19.3 ஓவர் முடிவில் பஞ்சாப் அணியினர் 168 ரன்களை 5 விக்கெட்டு இழப்பிற்கு எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.