பிரிட்டன் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் – மத்திய அரசு முடிவு !

0
பிரிட்டன் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் - மத்திய அரசு முடிவு !
பிரிட்டன் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் - மத்திய அரசு முடிவு !
பிரிட்டன் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் – மத்திய அரசு முடிவு!

பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பயணத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது போன்ற பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது கொரோனா தடுப்பூசி தான். முன்னதாக தடுப்பூசி தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்தாலும், பின்னர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடங்கியுள்ளனர். தொற்று பாதிப்பு ஆரம்பித்தவுடன் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை ஆய்வு செய்து அதனை உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்நிலையில், இந்தியாவின் சீரம் நிறுவனம் பிரிட்டன் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து இந்தியாவில் விநியோகித்து வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் குறைந்த கொரோனா தொற்று; இன்று 1,597 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

தொற்று அச்சறுத்தல் காரணமாக பல நாடுகள் மற்ற நாடுகளுடன் தங்களின் போக்குவரத்தை தடை செய்துள்ளது. ஒரு சில நாடுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் பிரிட்டன் அரசு வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயண கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி, பிரிட்டன் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசியை செலுத்தியவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிரிட்டன் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு இடம் பெறவில்லை.இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருந்தாலும் அவர்கள் முழுமையான தடுப்பூசி செலுத்தியவராக கருத முடியாது.

‘யாரடி நீ மோஹினி’ சீரியல் யமுனா வெளியிட்ட ரகசியம் – தண்ணீர் தான் காரணம்!

இவர்கள் அக்டோபர் 4ம் தேதி முதல் அனைவரும் பயணத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் தங்கும் இடத்தில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பிரிட்டன் அரசு சீரம் இந்தியா நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், இருப்பினும், இந்திய பயணியருக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு காதலருடன் திருமணம் – அவரே வெளியிட்ட புகைப்படம்!

இந்நிலையில், மத்திய அரசு பிரிட்டனின் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 4 ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், பயணத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பிரிட்டன் பயணிகள் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே கண்டிப்பாக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!