IPL 2021 – RR vs RCB: பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!
இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடத்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக ஆடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
அபார வெற்றி:
ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்டம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று 43 வது போட்டி துபாய் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடந்தது. ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முன்னதாக போடப்பட்ட டாசில் பெங்களூர் அணி வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லூயிஸ் இருவரும் இறங்கினார்கள்.
மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
இருவரும் இணைந்து அபாரமாக ஆடி லூயிஸ் 58 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டையும், ஜெய்ஸ்வால் 31 ரன்களையும் எடுத்து தனது விக்கெட்டை இழந்தனர். பெங்களூர் அணியின் ஹர்சத் படேல் இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுளை எடுத்தார். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணியினர் 149 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தனர். இதனால் அடுத்து களம் இறங்கும் பெங்களூர் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
TN TRB அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – சுற்றறிக்கை வெளியீடு!
கோலி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி ஆட்டத்தை இழந்தார். படிக்கல் 22 ரன்கள் மற்றும், ஸ்ரீகர் 44 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். அணியில் அதிகபட்சமாக மாக்ஸ்வெல் அரை சதம் எடுத்து தொடர்ந்து ஆட்டத்தை இழக்காமல் இருந்தார். இந்நிலையில், 17.1 ஓவர் முடிவில் பெங்களூரு அணியினர் 153 ரன்களை 3 விக்கெட் இழப்பிற்கு எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணியினரை பெங்களூர் அணியினர் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றுள்ளனர்.