தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சத்துணவு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு செப். சம்பளம் – புதிய சிக்கல்!
தமிழகத்தின் பல பகுதிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து வரும் நிலையில் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பள்ளி வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திரைக்கு தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெண் போலீசாருக்கு தினசரி 8 மணிநேரம் மட்டுமே வேலை – சூப்பர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.