கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு முக்கிய அறிவிப்பு – அமெரிக்க அரசு!
கொரோனா பரவல் அச்சம் காரணமாக அமெரிக்காவில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளில் வரும் நவம்பர் மாதம் முதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று அமெரிக்காவின் அதிகாரபூர்வ தகவல் வெளி வந்துள்ளது.
பயண கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்றின் முதல் அலை 2020 டிசம்பர் மாத்தில் உலகம் முழுவதும் குறைய தொடங்கி மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார். ஆனால் மக்களின் கவனக்குறைவினால் இரண்டு மாதங்களில் அதாவது, 2021 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மெல்ல பரவ தொடங்கியது. ஆனால் இரண்டாம் அலையில் வரலாறு காணாத அளவிற்கு உலகம் முழுவதும் பாதிப்புகள் பதிவாகியது.
5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி – பைசர் நிறுவனம் அறிவிப்பு!
இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எல்லையை மூட தொடங்கியது. அண்டை நாடுகளுடனான அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்தது. அமெரிக்க அரசு தங்கள் நாட்டினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவிற்கும் நுழைய பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் கோவிட் நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெப் ஜியன்ட்ஸ் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகள் வரும் நவம்பர் மாதம் முதல் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே போதும்.
EPFO Nomination Announcement – PF கணக்கில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு!
ஆனால் அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் அளிக்க வேண்டும் மற்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். பயணிகளின் விவரங்களை விமான நிறுவனங்கள் சேகரித்து 30 நாட்கள் வரை பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.