5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி – பைசர் நிறுவனம் அறிவிப்பு!
5 முதல் 11 வயதான குழந்தைகளுக்கு பைசர் நிறுவனம் தடுப்பூசி சோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது.
பைசர்:
கொரோனா தீவிர பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகம் முழுவதும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
EPFO Nomination Announcement – PF கணக்கில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு!
பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருந்து வந்த நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெரியவர்களுக்கு செலுத்தப்படும் மருந்தில் 3இல் ஒரு பங்கு குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு செலுத்தப்பட்ட தடுப்பூசி நல்ல பலனை தருவதாக நிறுவனம் கூறியுள்ளது. அனைவரை போலவும் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்ததாக ஆய்வில் கூறப்படுகிறது.
உடுமலை செப்.22 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இது குறித்து நிறுவனம் கூறியதாவது, எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் கோரி இந்த மாதம் விண்ணப்பிக்க உள்ளோம்.அதன் பின் ஐரோப்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். இந்த வயது குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் என கூறியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பைசர் நிறுவனம் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது.