EPFO Nomination Announcement – PF கணக்கில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு!
வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் தொலைபேசி எண் UAN மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் எளிதில் PF தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் மிஹர் குமார் கூறியுள்ளார்.
மிஹர் குமார் :
ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர், வேறு ஒரு நிறுவனத்திற்கு செல்ல இருந்தால் அவரது PF கணக்குகளை புதிய நிறுவனத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது ஊழியர்கலின் குடும்பத்திற்கு உதவும் வகையில் புதிய வசதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் மிஹர் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடுமலை செப்.22 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதில், இணையவழியில் பரிந்துரை செய்யும் அம்சத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள நபர் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி எளிய முறையில் தனக்கு வேண்டிய நபர்களை பரிந்துரைக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ஊழியர் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தை சேர்ந்த நபர்கள் குறிப்பிட்ட நபரின் வைப்பு நிதி கணக்கில் பரிந்துரைக்கப்படாததற்காக அலைகழிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
புதிய முறையின் மூலம் வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் தொலைபேசி எண் UAN மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் எளிதில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அனைத்து உறுப்பினர்களும் விரைவில் இணையவழி பரிந்துறையில் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பயனாளிகள் இணைய வழியில் பென்ஷன் தொகையை கேட்டு பெறமுடியும் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உறுப்பினரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி. மூலம் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.