தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதமே திறக்க வேண்டிய பள்ளிகள் கொரோனா பரவலின் காரணமாக செப்டம்பர் மாதம் முதல் தான் திறக்கப்பட்டது. 2ம் அலை குறைந்ததை அடுத்து மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பினருக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பினருக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி!!
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரிடம் பல கோரிக்கைகளை ஆசிரியர்கள் வைத்துள்ளனர். அதில் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கூடுதலாக, அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் பள்ளிகள் திறப்பு கோரிக்கைக்கு பெற்றோர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.