1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி!!
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அண்டை மாநிலமான கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா 2ம் அலை குறைந்துள்ளதை அடுத்து கல்வி நிறுவனங்களை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!
இவர்களுடன் 10 மற்றும் 12ம் வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எடுக்க வேண்டிய வழிமுறைகளை விவரித்துள்ளனர். பள்ளிகள் திறப்பதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் ஆகியவற்றை பள்ளி நிர்வாகத்தினர் வழங்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே போல் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுக்க மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.