1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற செப்டம்பர் 21ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகிய நிலையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து அடுத்தகட்டமாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது.

நவம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!

தற்போது உத்தரகண்ட் மாநில அரசு தொடக்க பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் 21 முதல் முறையான கோவிட் -19 நெறிமுறைகளுடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க உள்ளது. கோவிட் -19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 16, 2021 முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாநிலத்தில் பள்ளிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வீட்டில் இருந்தே பயிலலாம்.

செப்.27ம் தேதி பள்ளி, கல்லூரிகள் & அரசு அலுவலகங்கள் செயல்படாது? நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு!

அரசு பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, வகுப்புகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே நடத்தப்படும். மேலும், அனைவரும் முறையான சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் பிறவற்றை பராமரிக்க வேண்டும். சரியான COVID-19 நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிவறைகள், நூலகங்கள் பள்ளி அதிகாரிகளால் சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!