“விஜய்க்கும் எனக்கும் பிரச்சனை இருக்கு” – வெளிப்படையாக பேசிய எஸ்.ஏ.சி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தனக்கும் தனது மகனிற்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவில் டாப் நடிகர் என்ற இடத்தில் இருப்பவர் விஜய். அவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நல்ல பேரும், புகழும் அவருக்கு உண்டு. பலருக்கு உதவி செய்த நல்ல பெயரும் அவருக்கு உண்டு. ஆனால் சில இடங்களில் அவர் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் அவர் தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சி தொடங்க இருப்பதாக பதிவு செய்தார். ஆனால் இதில் நடிகர் விஜய்க்கு விருப்பமே இல்லை.
‘விஜய் டிவி’ முதல் ‘சன் டிவி’ வரை – சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
அதனால் அந்த கட்சிக்கும் தனக்கும், நேரடியாகவோ, மறைமுகமாவோ எந்த தொடர்பும் இல்லை என விஜய் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் என்னுடைய தந்தையின் கட்சி என்பதற்காக அதில் இணைந்து கொள்ள வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட அவர் விஜய்க்கும் அவருக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
“பாரதி கண்ணம்மா” பிரபலம் அகிலன் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் – ரசிகர்கள் வாழ்த்து!
அதில் அவர் கூறுகையில், துப்பாக்கி நான் துவங்கிய படம். சில காரணங்களால் நான் அந்த படத்தை தொடர முடியவில்லை. விஜய்க்கு மிகப்பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே. சமூக நோக்கத்தோடு ஒவ்வொரு இயக்குனரும் இருக்க வேண்டும். உண்மையை பயப்படாமல் உரக்க சொல்ல வேண்டும். எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா? சில நாட்களில் அது சரியாகி விடும். அதுபோல தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக்கொள்வோம். நாளை சேர்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.