சிறப்பாசிரியர் பணிக்கான தமிழ் வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் – ஆசிரியர்கள் வேதனை!
தமிழகத்தில் சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தி 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் இன்னும் வெளியாகாததால் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்வழி ஒதுக்கீடு:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து உடற்கல்வி, ஓவியம், இசை போன்ற சிறப்பாசிரியர்களான தேர்வு நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகியும் தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதனால் தேர்வெழுதிய ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு – மாலை விலை நிலவரம்!
அரசு உயர்நிலை பள்ளியில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 1,325 காலி இடங்களை நிரப்புவதற்காக, 2017 செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வில் 35,781 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2018 ஜூலை மாதம் வெளியானது. ஆனால் இந்த தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. தமிழ்வழி ஒதுகீடு அல்லாத பிற பிரிவுகளில் தேர்வானோர் அரசு பணியில் சேர்ந்து விட்டனர்.
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழ்வழி ஒதுக்கீடு கோரியவர்கள் உள்ளிட்ட பலரின் சான்றிதழ்களை ஆரியர் தேர்வு வாரியம் ஏற்கவில்லை. பிற பிரிவுகளில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்களுக்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து பதிவெண்கள் அடங்கிய பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் தங்களோடு தேர்வு எழுதியவர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், சிறப்பாசிரியர்கள் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் வெளியாகாதது வேதனை அளிக்கிறது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனவே தமிழ்வழி ஒதுக்கீடு இறுதி தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.