இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

0
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணத்தினால் கிட்டத்தட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் இன்றும், நாளையும் (செப்டம்பர் 13, 14) உள்ளிட்ட இரண்டு நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்

நாடு முழுவதும் தற்போது கொரோனா பேரலை தாக்கம் குறைந்திருப்பதால் ஒடிசா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு துவங்கியுள்ள நேரடி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக உருவாகி இருக்கும் கனமழை காரணமாக ஒடிசாவில் செயல்பட்டு வரும் பள்ளிகளை 2 நாட்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரமாக ஒடிசாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு – அறநிலையத்துறை ஆணையர்!

குறிப்பாக வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரையில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, பத்ரக் மாவட்டத்தில் உள்ள சந்த்பாலி அருகே இன்று (செப்டம்பர் 13) காலை கரையைக் கடந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்த தாழ்வழுத்தம் வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலைநகர் புவனேஸ்வர் (195 மிமீ) மற்றும் பூரி பகுதியில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு கனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதுவரை பெய்துள்ள கனமழையை தொடர்ந்து புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கியது. புவனேஸ்வர் ரயில் நிலையம் மற்றும் கேதர்கவுரி கோவில், கட்டாக்கில் உள்ள ஆச்சார்யா ஹரிஹர் புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு நிலையம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே ஒடிசாவின் கடலோர, வடக்கு மற்றும் உள்துறைப் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அந்த வகையில் பூரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 530 மிமீ மழையும், ககத்பூர் (525 மிமீ), பாலிக்டா (440 மிமீ) ஜகத்சிங்பூர், கட்டாக், கந்தாபாரா (381 மிமீ) மற்றும் நியாலி (370) போன்ற மாவட்டங்களிலும் மழையளவு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை – முதல்வர் அறிவிப்பு!

கனமழையை முன்னறிவித்த வானிலை மையம் சம்பல்பூர், தியோகர், அங்குல், சோனேபூர் மற்றும் பர்கர் மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுத்தது. அதே சமயம் போலங்கிர், ஜார்சுகுடா, சுந்தர்கர், பவுத், கியோஞ்சர், தேன்கனல், குர்தா, ஜகத்சிங்பூர், பூரி மற்றும் கட்டாக் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை எச்சரிக்கை காரணமாக ஒடிசாவின் 12 மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை (செப்டம்பர் 13, 14) ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!