‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஜோடியாக புது நடிகை – ஐஸ்வர்யா மாற்றம்! ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா மாற்றப்பட்டுள்ளதாக செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஜோடியாக புது நடிகை :
தற்போது உள்ள சந்ததியினருக் கூட்டுக்குடும்பம் என்ற ஒன்று எப்படி இருக்கும் என்பதை அழகாகவும் அழுத்தமாகவும் தினம்தோறும் நம் வீடுகளுக்கு விருந்தளிக்கும் காட்சியாக வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் வீட்டிற்கு வரும் மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறுகிறது இந்த தொடர்.
மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை – ஸ்பெஷல் எபிசோட்!
இந்த தொடரின் கடைக் குட்டியாக வரும் கண்ணனுக்கு விஜி தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்.இவர்கள் வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்கின்றனர். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை ஏற்க மறுகின்றனர். தனி குடித்தனம் நடத்தும் இவர்கள் இருவரும் தனது அண்ணன்களின் உதவியால் மீனா அப்பாவின் கடையில் வேலை செய்கிறனர். இந்த சீரியல் கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திலிருந்து எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. திருமணத்திற்கு பின் இந்த சீரியலை பார்ப்பவர் எண்ணிக்கையும் TRB யும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
லட்சுமி அம்மா இறந்து விட்டதாக கூறும் மருத்துவர் – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தசித்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டதால், அவர் கதாபாத்திரத்திற்கு பாரதிகண்ணம்மா சீரியலில் நடத்த காவியா அறிவுமதி நடித்து வருகிறார். இன்றளவும் சித்ரா தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று பல்வேறு கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
கண்ணனுக்கு ஜோடியாக வரும் தீபிகா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்த ஐஸ்வரியா கதாபாத்திரத்திற்கு மூன்று நடிகைகள் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த மாற்றம் சரியாக வராது எனவும், காயத்ரி கண்ணனுக்கு ஏற்ற ஜோடியாக இருக்க மாட்டார் எனவும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.