லட்சுமி அம்மா இறந்து விட்டதாக கூறும் மருத்துவர் – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!
பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது இந்த வார புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மூர்த்தியின் அம்மா லட்சுமி இறந்துவிட்டதாக மருத்துவர் கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல்:
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கூட்டுக் குடும்பங்களில் ஏற்படும் அனைத்தையும் இந்த சீரியல் மூலம் மக்கள் அன்றாடம் ரசித்து வருகின்றனர். நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையில் ஏற்படும் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை எதார்த்தமாக கூறுகிறது இந்த சீரியல். கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்தில் இருந்தே இந்த சீரியல் நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது. பல நாட்களாக இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளிவராத நிலையில் தற்போது 30 அடுத்த வாரம் நிகழும் காட்சிகளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து விநியோகம் செய்யும் திட்டம் – மத்திய அரசின் புதிய முயற்சி!
இதுவரை இந்த சீரியலில் வீட்டை எதிர்த்து திருமணம் செய்கிறார் கண்ணன். வீட்டில் இதுவரை கடைக் குட்டியாக வாழ்ந்து வந்த அவர் செய்வதறியாது தனியாக நிற்கிறார். வீட்டிலுள்ள அனைவரும் அவரை ஏற்க மறுத்த பின் அவர்களின் உதவியால் தனியாக வீடு எடுத்து தங்குகிறார். அனைவரும் அவர் படிக்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் பகுதி நேரமாக மீனாவின் அப்பாவின் கடையில் வேலை செய்கிறார். இந்த திருமணத்தால் கண்ணனின் அம்மாவான லட்சுமிக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. பின் அவரும் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுகிறார். கண்ணனும் தனது அம்மாவை காண வீட்டு வாசலில் நிற்கிறார். ஆனால் வீட்டில் உள்ள யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மூர்த்தி அப்பாவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை கொண்டா குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். மகாலட்சுமி அம்மாவும் இந்த வருடம் செய்ய முடியாது என்று சொல்கிறார் . வீட்டில் உள்ள அனைவரும் ஏன் என்று கேட்க, நாளைக்கு என்ன நடக்குமோ என சொல்கிறார். அதற்கு தனம் நாளைக்கு ஒன்றும் நடக்காது என்று கூறி சாப்பாட்டை தனது அத்தைக்கு ஊட்டி விடுகிறார். ஆனால் லட்சுமியும் மூர்த்தி கையால் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுகிறார் . கதிரும் ஜீவாவும் தனது அம்மா என்று வேறு மாதிரி நடந்து கொள்கிறார் என கூறுகின்றனர்.
இவ்வாறு இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்க தற்போது வெளிவந்து ப்ரோமோவில் வழக்கம்போல் கதிர் அம்மாவை எழுப்ப செல்கிறார். ஆனால் அவரும் எழாமல் இருக்க, வீட்டில் உள்ள அனைவரையும் அழைக்கிறார். அனைவரும் பதறிப்போய் வருகிறார்கள். லட்சுமி அம்மா எழாமல் இருக்க சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மருத்துவரை அழைத்து வருகின்றனர். மருத்துவர் வந்து பரிசோதித்து அவர் இறந்துவிட்டார் என்று கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து போய்விடுகிறது. அனைவரும் அழுது புலம்புகின்றனர். இதனை ஓரமாக நின்று பார்க்கும் தனம். பின் அவரும் இனிமேல் நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என்று கதறி அழுகிறார் இதோடு இந்த ப்ரோமோ முடிவடைகிறது.