அஞ்சலிக்கு ஜோடியாக சீமந்தம் செய்யும் பாரதி, கண்ணம்மா – ஹேமா யார் குழந்தை? கேள்வியால் அதிர்ந்த சௌந்தர்யா!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என அஞ்சலி சொன்னதை கேட்ட கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் ஹேமா யாரு என கேட்கிறார். ஹேமா ஏன் என்னை போலவே இருக்கிறாள் என கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் பல்வேறு திருப்பங்களுடன் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் மருத்துவமனைக்கு செல்லும் கண்ணம்மாவிடம் உனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மையை மருத்துவர் சொல்லிவிடுகிறார். அதை கேட்ட கண்ணம்மா குழப்பத்தில் சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். ஆனால் சௌந்தர்யா எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாரதி கண்ணம்மா’ வரை – டாப் ரேட்டிங் சீரியல்களின் கமெண்ட்கள்!
அதன் பின்னர் அஞ்சலியின் வளைகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது. அஞ்சலியின் வளைகாப்பிற்கு கண்ணம்மா, வெண்பா என அனைவரும் வருகின்றனர். பாரதி வெண்பாவுடன் நெருக்கமாக இருந்து கண்ணம்மாவை வெறுப்பேத்துகிறார். இந்நிலையில் வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என அஞ்சலி உண்மையை சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைந்த நிலையில் இன்று புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அதில் கல்யாணம் ஆகாமல் இருப்பதால் வெண்பாவை ஆசிர்வாதம் செய்யாமல் அனுப்புகின்றனர். அப்போது கண்ணம்மாவை அழைத்து பாரதியுடன் சேர்ந்து ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார் அஞ்சலி. பின்னர் சௌதர்யாவும் வேணுவும் பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணம்மா வருகிறார். வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்றால் ஹேமா அம்மா யாரு என கேட்கிறார். ஹேமா ஏன் என்னை போலவே இருக்கிறாள் என கேட்கிறார். சௌந்தர்யா என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கிறார்.