ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ – செப்.5 இன்று ஆசிரியர் தினம்!

0
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' - செப்.5 இன்று ஆசிரியர் தினம்!
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' - செப்.5 இன்று ஆசிரியர் தினம்!
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ – செப்.5 இன்று ஆசிரியர் தினம்!

நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியர் தினம்:

நாடு முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாதா பிதா குரு தெய்வம் என ஆசிரியர்களுக்கு நமது முன்னோர்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். ஆசிரியர்கள் என்பது மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமின்றி, ஒழுக்கம், பண்பு, பொதுஅறிவு, ஆன்மிகம் போன்ற அனைத்தையும் கற்று கொடுத்து, மாணவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியை செய்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

அஞ்சலிக்கு ஜோடியாக சீமந்தம் செய்யும் பாரதி, கண்ணம்மா – ஹேமா யார் குழந்தை? கேள்வியால் அதிர்ந்த சௌந்தர்யா!

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர் மற்றும் நல்ல குணங்களை கொண்ட மனிதர் என்பதும் மாணவர்களிடையே பிடித்த ஒரு சிறந்த ஆசிரியராக இருந்துள்ளார் என்பதால் அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு சேவை, மாணவர்களிடம் உள்ள நல்ல திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரும் உன்னத பணி ஆசிரியர்களுக்கு உள்ளது.

பள்ளிகளை அவசியம் திறக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி!

ஒரு குழந்தையை பெற்றுக் கொடுப்பவள் தாய், அந்தக் குழந்தையை சான்றோன் ஆக்குவது தந்தை. ஆனால் அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு முழு மனிதனாக ஆக்குவது ஆசிரியர்தான். எனவேதான் ஆசிரியருக்கு தாய் தந்தைக்கு அடுத்த மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு துணையாக இருப்பது ஆசிரியர்கள்தான். மற்ற பணிகளைப் போல ஆசிரியர் பணி என்பது ஒரு வாழ்வாதாரத்திற்கான பணி கிடையாது. ஒருவருடைய வாழ்வாதாரத்தை உருவாக்கும் பணி. ஆசிரியர்களின் பணிக்கு ஊதியம் கொடுத்தாலும் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதும் ஆசிரியரின் பணிக்கு எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும் அது நிகராகா என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!