ஊரடங்கிற்கு முன் சீசன் டிக்கெட் எடுத்த ரயில் பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
ஊரடங்கு காலத்தில் ரயில் சேவை முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமுடக்கத்திற்கு முன்பு எடுத்த சீசன் டிக்கெட்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
சீசன் டிக்கெட்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தேவையின்றி ஒன்று கூடுவது தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் முதலியன படிப்படியாக குறையத் தொடங்கியது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 ஆக அதிரடி உயர்வு – இன்றைய விற்பனை!
ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. சர்வதேச விமான சேவை முதலியன முடக்கி வைக்கப்பட்டது. சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டும் முன்பதிவுடன் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரயில்வே மற்றும் விமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிறுவனம் மக்களுக்கு சீசன் டிக்கெட்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 42,618 பேருக்கு தொற்று! 330 பேர் பலி!
இதன் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்கு பயணித்து கொள்ளலாம். ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள் வாங்கிய சீசன் டிக்கெட்களை உபயோகப்படுத்த இயலவில்லை. அதனை தொடர்ந்து சீசன் டிக்கெட்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து, இழந்த நாட்களின் எண்ணிக்கையில் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து சீசன் டிக்கெட்டில் 20 நாட்கள் மீதம் இருந்தால், அந்த சீசன் டிக்கெட்டில் 20 நாட்கள் பயணம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.