இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 42,618 பேருக்கு தொற்று! 330 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 330 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றும், நாளையும் கடைகள் & மால்கள் அடைப்பு – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
இந்த நிலையில் நாடு முழுவதும் புதிதாக 330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 67,72,11,205 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
Tokyo Paralympics துப்பாக்கிச்சுடுதல் – இந்திய வீரர்கள் தங்கம் & வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!
மேலும் தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,385 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது வரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.43% ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.