சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 ஆக அதிரடி உயர்வு – இன்றைய விற்பனை!
சென்னையில் இன்று (செப்டம்பர் 4) காலை துவங்கியுள்ள ஆபரணத் தங்கத்தின் விற்பனையில், ஒரு சவரன் நகையின் விலை ரூ.352 என அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நகை விற்பனை
தினசரி விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை என்பது கணிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என தங்கத்தின் விலையானது தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. அதனால் நகை பிரியர்கள், நகைகளை வாங்க செல்லும் முன்னதாக கடைகளின் விவரங்கள், அன்றைய தள்ளுபடி, செய்கூலி, சேதாரம் குறைவாக உள்ள கடைகள் ஆகியவற்றுடன் அன்றைய விற்பனை நிலவரத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 42,618 பேருக்கு தொற்று! 330 பேர் பலி!
அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 3) அதிசயமாக குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 4) மீண்டும் அதிரடியான விலை உயர்வை எட்டியுள்ளது. அதாவது நேற்றைய விற்பனையில், சவரனுக்கு ரூ.24 என உயர்ந்திருந்த விலை, இன்று பன்மடங்கு அதிகரித்து விற்பனை நடந்து வருகிறது. இப்படி ஏதாவதொரு நாளில் நகைகளின் விலை குறைந்திருக்கிறது என நிம்மதி கொள்கையில், அடுத்த ஓரிரு நாட்களில் நகைகளின் விலை உயர்வடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு
சென்னையில் இன்றைய நகை விற்பனையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 வரை உயர்ந்து ஒரு சவரன் நகை ரூ.35,968 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தவிர ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 வரை உயர்வை கண்டு, ஒரு கிராம் தங்கம் ரூ.4,496 க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.