Tokyo Paralympics துப்பாக்கிச்சுடுதல் – இந்திய வீரர்கள் தங்கம் & வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே வேளையில் வீரர் சிங்ராஜ் இந்தியாவுக்கான வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல்
ஜப்பானில் நடைபெற்று வரும் 16 ஆவது டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வரும் இந்திய வீரர்கள் இன்று (செப்டம்பர் 4) 2 பதக்கத்தை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் பாராலிம்பிக் போட்டிகள் துவங்கி, 12 ஆவது நாளான இன்று காலை 8:55 மணியளவில் ஆரம்பித்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் மணீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் உள்ளிட்ட 2 வீரர்கள் கலந்து கொண்டனர்.
IND vs ENG 4வது டெஸ்ட் – மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்து பந்துவீச முயன்ற ஜார்வோ 69 கைது!
இந்த போட்டியில் 50மீ பிஸ்டல் பிரிவில் வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்திய அணி வலுசேர்த்து வருகிறது. துப்பாக்கி சுடுதல் கலப்பு 50 மீ பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால், 218.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அதே நேரத்தில் வீரர் சிங்கராஜ் 216.7 புள்ளிகள் வென்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
Tokyo Paralympics பேட்மிண்டன் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! பைனலில் பிரமோத் பகத்!
இந்த போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த வீரர் செர்ஜி மாலிஷே 196.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கத்தை பெற்றுள்ளார். இந்த 2 வீரர்களும் பதக்கங்களை பெற்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு மொத்தம் 15 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதனுடன் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற வீரர்கள் மணீஷ் நர்வால், சிங்ராஜ் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.