TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் – கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பணியில் சேர வேண்டும் என மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
TNEB கேங்மேன்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார துறையில் கேங்மேன் பணிக்கான வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. கேங்மேன் பணி என்பது மின் இணைப்பு கேட்பவர்களுக்கு நேரில் சென்று இணைப்பை கொடுப்பது, மின்கம்பம் நடுவது, மின்கம்பம் ஏறுவது, மரம் வெட்டுவது, லைன் இழுத்து கொடுப்பது, மின் பணிக்காக பள்ளம் தோண்டுவது, மின்வெட்டு பிரச்சனை சரி செய்யப்பட்ட பிறகு தோண்டிய பள்ளத்தை மூடுவது போன்ற பணிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சதம் அடிக்க திணறும் ‘ரன் மெஷின்’ கோலி – 50 இன்னிங்ஸ்களாக தொடரும் எதிர்பார்ப்பு!
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளரை சந்தித்து, பணியில் சேர்வதற்கான உறுதியை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியாகி இன்னும் பலர் இந்த பணிக்கான தங்கள் வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர் நலன் பிரிவின் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பணிக்கு வராதவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணியில் சேர வேண்டும் எனவும், அவ்வாறு சேராதவர்கள் அடங்கிய பெயர் பட்டியலை அறிக்கையாக தயார் செய்து தலைமை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கடந்த இரு தினங்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவித்து உள்ளார்.