ஆகஸ்ட் 24 வரை இண்டிகோ விமான வர்த்தகத்திற்கு தடை – UAE உத்தரவு!
கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இண்டிகோ விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அறிவித்துள்ளது. இதனுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் புதிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து
உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா 2 மற்றும் 3 ஆம் அலை பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாடுகளுக்கு இடையேயான பயணிகள் விமான சேவைகளைளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இண்டிகோ விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அதாவது UAE விமான நிலையங்களில் பல பயணிகள் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இத்தகைய நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இண்டிகோ விமான சேவைகள் நிறுவனம் கூறுகையில், ‘எங்கள் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து பயணிகளுக்கும் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளோம்.
மீண்டும் விமான சேவைகள் செயல்படத் தொடங்கியதும் அவர்களது இருக்கைகளை திருப்பித் தரவோ அல்லது சரி செய்யவோ முயற்சிப்போம்’ என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட் அரசின் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு பயணியும் விமானத்தில் ஏறுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. மறுபுறத்தில் கத்தார் சுகாதார அமைச்சகம் வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, கத்தாரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அல்லது கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள், இந்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள், கட்டாயமாக இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். கொரோனா தொடர்பான பரிசோதனை முடிவுகள் வந்த இரண்டாவது நாளில் தனிமைப்படுத்தல் நிறுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகள் UAE அரசுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ஐக்கிய அரபு எமீரகம் 14 நாடுகளுக்கான விமான தடையை ஜூலை கடைசி வாரம் வரை நீட்டித்தது. அதன் கீழ் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ, உகாண்டா, சாம்பியா, வியட்நாம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். இவற்றில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கூடுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.