ராதிகாவிற்கு ஆறுதல் சொல்லும் கோபி, அதனை பார்த்து கடுப்பான எழில் – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி மற்றும் ராதிகா நெருக்கமாக இருப்பதை எழில் பார்த்து விடுகிறார். எழில் வீட்டில் தெரிவித்து விடுவானோ என கோபி பதட்டத்தில் உள்ளனர். எழிலின் உதவி மனப்பான்மையை பார்த்து அமிர்தா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியும், ராதிகாவும் ஹோட்டலுக்கு செல்கின்றனர். அங்கு ராதிகா மயூரா குறித்து கவலை அடைகிறார். கோபி அவருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அங்கு எழில் தனது நண்பரை பார்க்க வருகிறார். ராதிகா மிகுந்த கவலையில் இருக்க அவருக்கு ஆறுதல் கூற கோபி அருகில் சென்று அவரை தனது தோளில் சாய்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த எழில் அதனை பார்த்து விடுகிறார். கோபியும் எழிலை பார்த்து பதட்டமடைகிறார்.
ராதிகாவை காரில் அனுப்பி விட்டு, பதட்டத்துடன் திரும்ப எழில் அவரை பார்த்து திட்டிவிட்டு கிளம்புகிறார். கோபி காரில் அமர்ந்து ராதிகா உடன் இருந்ததை எழில் வீட்டில் தெரிவித்து விடுவானோ என புலம்புகிறார். அவன் மிரட்டுவான் தவிர சொல்லமாட்டான் என தன்னைத்தானே தேத்திக்கொள்கிறார். பின்னர் எழில் தனது அம்மாவிற்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து வருத்தப்படுகிறார். கோபி மீது தனது அம்மா வைத்துள்ள நம்பிக்கை குறித்து கவலை அடைகிறான்.
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!!
அமிர்தா வீட்டில் கரண்ட் பில் காட்டாமல் இருக்கவே வெக்கையில் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு உள்ளனர். அப்போது அங்கே எழில் வர உடனே கரண்ட் பில் கட்டிவிட்டு ஆட்களை அழைத்து கரண்ட் வர ஏற்பாடு செய்கிறார். எழிலின் உதவு செய்யும் மனப்பான்மையை நினைத்து அமிர்தா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!