ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!!

0
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி -
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி - "பாரதி கண்ணம்மா" இன்றைய எபிசோட்!!
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா ஹேமா மீது காட்டும் பாசத்தை, பார்த்து லட்சுமி பொறாமைப்பட்டு கோபப்படுகிறார். அதன் பின்னர் பாரதி தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கிறார். பிறகு கண்ணம்மா, ஹேமா, லட்சுமி இரவு வெளியே தூங்க ஏற்பாடு செய்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா குறித்து புலம்ப வெண்பா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு செல்ல என் குடும்பத்தினர் தான் காரணம், அதுமட்டுமில்லாம அந்த டாக்டர் பிரியா கூட காரணம் என்று சொல்ல, ஹேமாக்காக நான் ஏசி அனுப்பின அதை எப்படி அவ திருப்பி அனுப்பலாம், அதுமட்டுமில்லாமல் செலவுக்கு காசு கொடுத்தேன் அதை கூட அவ வாங்கல அப்படி சொல்ல உடனே வெண்பா இவ்வளவு பண்ணிருக்கியா அவளுக்குனு கோவமா கத்துற, உடனே பாரதி வீட்டில் நிம்மதி இல்லைனு இங்க வந்த இங்கேயும் நிம்மதி இல்லனு கெளம்புறன்.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் ஆயுள் முழுதும் இலவசமாக படம் பார்க்கலாம் – ஐநாக்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

கண்ணம்மா, தாயம் விளையாட ஏற்பாடு செய்ய ஹேமா இது என்ன சமையல் அம்மானு கேக்குற, லட்சமி இது தாயம் இந்த இரண்டு கட்டையை உருட்டி விளையாடணும்னு சொல்றா, பின்னர் டீம் பிரிக்கும் போது ஹேமா நான் சமையல் அம்மா டீம்னு சொன்னதும் லட்சுமிக்கு பொறாமையும் கோவமும் வந்துருச்சு, விளையாட ஆரம்பிச்சதும், ஹேமா முதலில் தாயம் போடுகிறார். பின்னர் கண்ணம்மா தாயம் போடுகிறார். எவ்வளவோ விளையாடி ஹேமாகும் துளசிக்கு தாயம் வரல, உடனே லட்சுமி நான் விளையாட வரலன்னு கிளம்புகிறார்.

பின்னர் பாரதி குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இன்று பிரியாணி செய்ய வேண்டும் என மல்லிகாவிடம் கூறுகின்றனர். அப்போது கோபத்துடன் வரும் பாரதியிடம் மல்லிகா இன்று மட்டன் பிரியாணி செய்யவா என்று கேள்வி கேட்க, அதெல்லாம் வேணாம் வீட்டில் உள்ள எல்லா ரூம் ஏசி ரிமோட் எடுத்துக் கொண்டுவா என்று தெரிவிக்கிறார். எதுக்கு என்று கேட்க ஹேமா மட்டும் ஏசி இல்லாம இருக்க நீங்களும் இருங்க அப்போதான் ஹேமா கஷ்டம் தெரியும் அஞ்சலி ரூம் தவிர எந்த ரூம் ஏசி போடக்கூடாது என்று சொல்ல அனைவரும் பாரதியை நினைத்து சிரிக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – சண்டிகர் அரசு உத்தரவு!

பின்னர் ஹேமாவும், லட்சுமியும் விளையாடி கொண்டிருக்க, கண்ணம்மா தண்ணி தெளித்து கொண்டிருக்கிறார். எதுக்கு தண்ணி ஊதுறீங்கன்னு ஹேமா கேட்க நைட் நாம எல்லாரும் நிலா வெளிச்சத்துல தான் தூங்க போறோம்னு சொல்ல லட்சுமி மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் கண்ணம்மா வடை சுட்டு தர அதனை ஹேமா ஊட்டி விட சொல்கிறார். அதனை பார்த்ததும் லட்சுமி பொறாமைப்பட்டு கண்ணம்மாவை முறைத்து பார்க்கிறாள. இதனுடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!