அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணம் தள்ளுபடி – சண்டிகர் அரசு உத்தரவு!
கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் விதமாக சண்டிகர் அரசு 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 50% கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
கட்டணம் தள்ளுபடி:
கடந்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. பாதிப்பு நிலவரத்தை பொறுத்து அவ்வப்போது ஊரடங்குகளில் தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. ஊரடங்கு காலங்களில் தொழில்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதால் நாட்டில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29 சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், சண்டிகர் அரசு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் சலுகைகளை அறிவித்துள்ளது. சண்டிகர் மாநிலத்தில் பொதுவாக 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி உரிமைச் சட்டம், 2009 இன் கீழ் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. 6 வயது வரை மாணவர்களுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வியை வழங்குவது மாநிலத்தின் பொறுப்பாகும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க சண்டிகர் அரசு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்தது.
TN Job “FB Group” Join Now
அதேபோல், கோவிட் -19 இன் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு, சண்டிகர் நிர்வாகம் 2021-22 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் ஆண்டு மற்றும் மாதாந்திர கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.