ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் ஆயுள் முழுதும் இலவசமாக படம் பார்க்கலாம் – ஐநாக்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
நடப்பாண்டு ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு அவர்களின் ஆயும் முழுவதும் அவர்களின் குடும்பத்துடன் இலவசமாக திரையரங்கில் படம் பார்க்கும் வசதியை ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐநாக்ஸ் அறிவிப்பு:
நாட்டின் பெருமையை காப்பாற்றும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் வீர்ரகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டிபோட்டுக் கொண்டு பல சலுகைகளையும், பதவிகளையும் .வழங்கும். அரசு துறைகளில் உயர் பதவி, சொந்த வீடு மற்றும் கார் போன்றவையும் வீரர்களுக்கு பரிசாக கிடைக்கும். நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் தெரியும் படி உழைத்த வீரர்களை பாராட்டும் விதமாக இந்த சலுகைகள் அறிவிக்கப்படும்.
ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை – சவூதி அரசு எச்சரிக்கை!
32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தற்போது ஜூலை 23ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிகள் கடந்த 2020ம் ஆண்டு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோரோனா பரவல் பாதிப்புகள் காரணமாக நடப்பாண்டிற்கு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்தியாவை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஐநாக்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் இந்திய வீரர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இலவசமாக அவர்களின் குடும்பத்தினருடன் படம் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க உள்ள எந்த ஐநாக்ஸ் திரையரங்குகளிலும் அவர்கள் இலவசமாக படம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒரு வருடங்களுக்கு இலவசமாக படம் பார்க்கலாம் என்றும், இதற்காக இவர்களுக்கு பிரத்யேக அட்டை ஒன்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.