பிரசாந்த்திடம் கண்ணன் மீது உள்ள காதல் குறித்து சொல்லும் ஐஸ்வர்யா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இன்றைய எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசாந்த்திடம், கண்ணனை தான் பிடித்திருக்கு என உண்மையை ஐஸ்வர்யா தெரிவிக்கிறார். அதன் பின்னர் பிரசாந்த் வர வாரமே கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறார். பிறகு மூர்த்தி வீட்டிற்கு சென்று கல்யாணம் குறித்த அறிவிப்பை தெரிவிக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பிரசாந்த் மற்றும் மல்லி, ஐஸ்வர்யா வீட்டிற்கு வருகின்றனர். ஐஸ்வர்யாவை வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லி பிரசாந்த் அழைத்து செல்கிறார். தனம் வளைகாப்பு முடிந்து தனது அம்மா வீட்டிற்கு செல்லாமல் தனது அம்மாவை உடன் அழைத்து வந்துள்ளார். அவரது அம்மா அக்கறையுடன் தனத்தை கவனித்துக் கொள்கிறார். பின்னர் மீனா, தனம் முல்லை எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறார்கள் என கேள்வி கேட்கின்றனர்.
ஹேமா மீது கண்ணம்மா காட்டும் பாசம், பொறாமைப்படும் லட்சுமி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!!
முதலில் அக்காவிற்கு குழந்தை பிறக்கட்டும் எல்லாரும் குழந்தை பெற்றுக் கொண்டால் எப்படி வளர்ப்பது என்று சொல்லி சமைக்கிறார். பிரசாந்த் ஐஸ்வர்யாவை வெளியே அழைத்து வந்து தன்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை கேட்கிறார். உடனே ஐஸ்வர்யா நான் கண்ணா மாமாவை தான் விரும்புவதாக தெரிவிக்கிறார். இதனை கேட்டு பிரசாந்த் அதிர்ச்சி அடைகிறார். வீட்டிற்கு வந்ததும், தனது சித்தி மற்றும் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கல்யாண தேதி மாற்ற வேண்டும் என ஜோசியர் தெரிவித்ததாகவும், அடுத்த வாரமே முகுர்த்தம் உள்ளதாகவும் அதனை விட்டால் இன்னும் ஒரு வருடம் ஆகும் என தெரிவித்ததாக கூறுகிறார்.
அடுத்த வாரமே திருமணத்தை நடத்தலாம் என மல்லி மற்றும் ஐஸ்வர்யா சித்தி முடிவு செய்கின்றனர். நீங்க கவலைப்படாதீங்க எல்லா வேலையும் நானே பாத்துக்கிறேன் என பிரசாந்த் கூறுகிறார். அனைவரும் புறப்பட்டு தனத்தின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு பிரசாந்த் திருமணம் அடுத்த வாரமே நடைபெற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதனை கேட்டதும் கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். தனத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கல்யாணம் நடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். பின்னர் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் ஐஸ்வர்யா தெரிவித்ததை பிரசாந்த் கூறுகிறார். நாளைக்கு நீங்களும் ஐஸ்வர்யாவும் மதுரைக்கு எங்களுடன் வர வேண்டும் என பிரசாந்த் கூறுகிறார். இவளை இப்படியே விட கூடாது என ஐஸ்வர்யாவின் சித்தி திட்டமிடுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.