படிப்பை முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு – நர்சிங் படிப்புகள் குறித்த தகவல்கள்!!
உலகம் முழுவதும் எப்போதும் பணி வாய்ப்பை கொடுக்கும் துறைகளில் நர்சிங் துறை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அந்த படிப்பு குறித்த தகவல்களை காண்போம்.
நர்சிங் படிப்பு:
தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் மதிக்கும் தொழில்களில் செவிலியர் படிப்பு ஒன்றாகும். உலகம் முழுவதுமே செவிலியர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் செவிலியர்கள் பணிக்கு நல்ல முறையிலான போதிய அளவிலான ஊதியமும் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த அனைவருக்கும் கண்டிப்பாக பணி நியமனம் இருக்கும்.
தமிழக ரேஷன் கடைகளில் தொழில் நுட்ப கோளாறு – மக்கள் காத்திருப்பு !!
செவிலியர்களின் பணி மன நிறைவை கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்தது. அவர்கள் பணியினை சேவை என்றே சொல்லலாம். அதிலும் கடந்த வருடம் முதல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு எதிராக செவிலியர்களின் சேவை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது மருத்துவ உலகில் தொடர்ந்து செவியர்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது. செவிலியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளை கண்காணிப்பட்டது மற்றும் தரமான செவிலியர்களை உருவாக்கும் பணியையும் இந்திய நர்சிங் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது.
TN Job “FB Group” Join Now
இந்த கவுன்சில் சமீபத்தில் நோயாளி மற்றும் செவிலியர் அடிப்படையிலான விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, மூன்று நோயாளிக்கு ஒரு செவிலியர் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 22,000 செவிலியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தற்போது உடனடியாக நாட்டில் 4 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுவதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் செவிலியர் படிப்பில் நேரடியாக கலந்து கொள்ளலாம் குறிப்பிடத்தக்கது.