தமிழக ரேஷன் கடைகளில் தொழில் நுட்ப கோளாறு – மக்கள் காத்திருப்பு !!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் மக்கள் காத்திருப்பு :
தமிழகத்தில் அரசின் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் உணவு பொருட்களை குறைவான விலையில் வாங்கி பயன் பெறுகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு அரசு சார்பாக மளிகை பொருட்கள், நிவாரண நிதிகள் வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் மக்கள் கால விரயத்தை தடுக்கும் பொருட்டு ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் என்ற கருவி பயன்பாட்டுக்கு வந்தது. ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், விற்பனை கணக்கை சரியாக பராமரிக்கவும் ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாயனுக்கு வரும் மிரட்டலான போன் கால் – பரபரப்பான காட்சிகளுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!
இந்தக் கருவியில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டுகளின் விவரங்கள் மற்றும் ரேஷன் கார்டு தாரரின் செல்போன், ஆதார் எண்கள் பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கியதற்கான அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டைதாரர்களின் தொலைபேசிக்கு குறுந்செய்தி மூலமாக அனுப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் மக்கள் எளிதாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். விற்பனை பதிவுகளை சரி வர மேற்கொள்ள முடிகிறது என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாதாந்திர பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சர்வர் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி முடங்கியுள்ளது என ஊழியர்கள் பதிலளிக்கின்றனர். இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.