விஜய் டிவி புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மக்கள் தங்களின் சேனல் விட்டு நகர விடக்கூடாது என்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது அனைத்து தொலைக்காட்சி சேனல்களும். அதிலும் இல்லத்தரசிகளே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அந்த வகையில் புதுப்புது சீரியல்களை களம் இறக்குவதில் விஜய் டிவியின் பங்கு அதிகம். இந்நிலையில் அந்த டிவியின் புதிய படைப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் களம் இறங்க உள்ளதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இரண்டு சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி உள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
விஜய் டிவியில் புதிதாக வர இருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த சீரியலின் ப்ரோமோ தான். ஏனெனில் அடிக்கடி இந்த சீரியல் ப்ரோமோ ஒளிபரப்பாகி மக்களுக்கு இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!
அந்த ப்ரோமோவில் பல முறை 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சரஸ்வதி கதாபாத்திரம் இந்த முறையாவது தன்னை தேர்வில் தேர்ச்சி பெற வைக்குமாறு கடவுளை வேண்டுகிறார். அந்த வேளையில் அங்கு வரும் தமிழ், படிக்காதவன் என்ற காரணத்தினால் பல பெண்களால் நிராகரிக்கப்பட்டதை கடவுளிடம் சொல்லி தன் அம்மாவின் ஆசைப்படி தனக்கு ஒரு படித்த பெண் வேண்டும் என புலம்புகிறார். இதற்கு கடவுள் போல பேசி அவரை ஏமாற்றுகிறார் சரஸ்வதி. இவ்வாறு வரும் அந்த ப்ரோமோ மக்களை மிகுந்த அளவு ஈர்த்து உள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!
இதையடுத்து தீபக் மற்றும் நக்ஷத்ரா நாகேஷ் நடிப்பில் உருவான தமிழிழும் சரஸ்வதியும் சீரியல் வருகிற ஜூலை 12 ஆம் தேதி அதாவது நாளை முதல் விஜய் டிவியில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது இதுவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இனி மாலை 6 மணிக்கும், மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே சீரியல்’ இனி மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.