தமிழகத்தில் ஜூலை 6 ஆம் தேதி செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களுக்கு தடுப்பூசி முகாம்!!
இந்தியாவில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களுக்கு வரும் ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகள்
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா தாக்கம் கடுமையாக இருந்து வருகின்றது. இந்த நோய் தாக்கம் நாளுக்கு நாள் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இப்படியாக இருக்க, இந்த நோய் தாக்கத்தில் இருந்து தற்போது தற்காத்து கொள்ள ஒரே வழி தடுப்பூசி போட்டு கொள்வது தான். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து எந்த வித தெளிவும் இல்லாமல் இருந்து வந்தது.
இதனை அடுத்து அரசு மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டு கொள்ளும் அவசியத்தினை வலியுறுத்தியது. அதே போல் தடுப்பூசினை போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனால் மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் இரு வேறு விதமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களுக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வரும் ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைத்து இந்த முகாமினை நடத்துகின்றனர்.