அடுத்த 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா என்ற மாவட்டத்தில் தீவிரமாக உள்ளதால் அங்கு அடுத்த 8 நாட்களுக்கு தீவிரமான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக கொரோனா பரவி வருகின்றது. இதனால் அந்த மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சதாரா என்ற மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் – முழு விவரம் இதோ!!
அடுத்த 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற மாவட்டங்களான மும்பை, புனே, தானே, கல்யாண் டோம்பிவலி, பிம்ப்ரி-சின்ச்வாட், நாசிக் மற்றும் வசாய்-விரார் ஆகிய மாவட்டங்களிலும் வார இறுதி ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதில் சதாரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 900க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.