தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் – முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் மாற்றம்
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கட்சி 159 தொகுதிகளில் அமோகமாக வெற்றி அடைந்து ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் அவர் பல அதிரடியான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதே போல் பல அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டும், இடம் மாற்றமும் செய்யப்பட்டனர். தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் கொரோனாவால் 43,071 பேர் புதிதாக பாதிப்பு – 955 பேர் மரணம்!!
அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். இப்படியாக இருக்க, தற்போது தமிழகத்தில் உள்ள 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இப்படியாக 5 ஆட்சியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம்
- தொழிலாளர் நல ஆணையராக இருந்த முனியநாதன், தற்போது தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமனம்.
- தொழில் வழிகாட்டி ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண்மை ஆணையராக பூஜா குல்கர்னிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனராக கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக சங்கீதா நியமிக்கபட்டுள்ளார்.
- நில சீர்திருத்தத் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஆர்.லில்லி தொழில்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.