தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு – TNPSC க்கு கோரிக்கை!
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணிக்கான கல்வித்தகுதி முழுவதையும் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை பின் தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டினை டிஎன்பிஎஸ்சி திரும்ப பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இட ஒதுக்கீடு:
டிஎன்பிஎஸ்சி, தமிழில் படித்தோருக்கு இட ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது இதனை திரும்ப பெற வேண்டும் என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதன்படி அவர் கூறியதாவது, டிஎன்பிஎஸ்சி தேர்வு முழுவதையும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை பின் தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்திருக்கிறது.
தமிழகத்தில் தற்காலிக செவிலியர் பணிக்கான நேர்காணல் – நாளை துவக்கம்!
இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும். தமிழகத்தில் பெரும்பாலான அரசு பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் அஞ்சல் மூலம் தமிழ் வழியில் படித்து அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து பள்ளி கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த 20% இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020 மார்ச் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு சுமார் 9 மாத காலத்திற்கு பின்பே தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. தமிழக அரசுக்கு 18 துணை ஆட்சியர், 19 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 69 முதல் தொகுதி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட போட்டி தேர்விலும் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முறை.
ஆனால் டிஎன்பிஎஸ்சி இதற்கு மாறாக மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறிய காரணங்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்தாவது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே முதல் நிலைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதல் நிலை தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குவதில் சட்டத்திருத்தத்திற்கு முன்பு இருந்த விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டன. எனவே தமிழக அரசின் புதிய சட்டத்தை பின் தேதியிட்டு செயல்படுத்தினால் ஒரு பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
தமிழ் இட ஒதுக்கீட்டை முறைகேடாக அனுபவிப்பவர்களை தடுக்க வேண்டும் என்பதுதான் புதிய சட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறு இருக்கையில் சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்பாக போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஆங்கில வழியில் படித்த மாணவர்களால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை பின் தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை டிஎன்பிஎஸ்சி திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.