தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி? இன்று முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 5 ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. அதன்படி கொரோனா பரவல் எண்ணிக்கையை பொருத்து 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் வகை 1-ல் 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு – TNPSC க்கு கோரிக்கை!
மேலும் வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா குறைவாக உள்ளதால் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் இறுதி நிலையை அடைந்துள்ளது. இதனால் ஜூலை 5 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததாக கூறப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் அந்த 11 மாவட்டங்களில் கோவில்கள், துணிக்கடைகள், பேருந்து பொதுப்போக்குவரத்து, பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம், ஆகியவை திறப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.